பாவேந்தர் பாரதிதாசன்


பாவேந்தர் பாரதிதாசன்
====================
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
---------------------------------
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.
இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.
மறைவு
======
பாரதிதாசன் 21.4.1964 அன்று காலமானார்.
பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்
=======================================
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
பாரதிதாசனின் ஆக்கங்கள்
=======================
அகத்தியன் விட்ட புதுக்கரடி, பாரதிதாசன் பதிப்பகம்
அமைதி, செந்தமிழ் நிலையம்,
அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
இசையமுதம் (இரண்டாம் பாகம்), பாரதசக்தி நிலையம் (1952)
இசையமுதம் (முதல் பாகம்), பாரதசக்தி நிலையம் (1944)
இசையமுது (கவிதை நூல்)
இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்), குடியரசுப் பதிப்பகம் (1939)
இருண்ட வீடு (கவிதை நூல்)
இருண்ட வீடு, முத்தமிழ் நிலையம்
இளைஞர் இலக்கியம், பாரி நிலையம் (1967)
உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)
உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)
எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
எதிர்பாராத முத்தம், வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)
எது பழிப்பு, குயில் (1948)
ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
கண்ணகி புரட்சிக் காப்பியம், அன்பு நூலகம் (1962)
கதர் இராட்டினப்பாட்டு, காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)
கலை மன்றம் (1955)
கற்புக் காப்பியம், குயில் (1960)
காதல் நினைவுகள், செந்தமிழ் நிலையம் (1969)
காதல் பாடல்கள், பூம்புகார் பிரசுரம் (1977)
காதலா? - கடமையா?, பாரதிதாசன் பதிப்பகம் (1948)
குடியரசுப் பதிப்பகம் (1944) பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)
குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி), பாரதிதாசன் பதிப்பகம் (1942)
குடும்ப விளக்கு (கவிதை நூல்)
குடும்ப விளக்கு (திருமணம்), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
குடும்ப விளக்கு (மக்கட் பேறு), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
குடும்ப விளக்கு (முதியோர் காதல்), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
குடும்ப விளக்கு (விருந்தோம்பல்), முல்லைப் பதிப்பகம் (1944)
குயில் பாடல்கள், பூம்புகார் பிரசுரம் (1977)
குறிஞ்சித் திட்டு, பாரி நிலையம்
குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
சஞ்சீவி பர்வதத்தின் சாரல், பாரதிதாசன் பதிப்பகம் (1949)
சேர தாண்டவம் (நாடகம்), பாரதிதாசன் பதிப்பகம் (1954)
தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
தமிழச்சியின் கத்தி, பாரதிதாசன் பதிப்பகம் (1949)
தமிழியக்கம், செந்தமிழ் நிலையம்
தமிழுக்கு அமுதென்று பேர்
தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்), பூம்புகார் பிரசுரம் (1978)
தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
தேனருவி இசைப் பாடல்கள், பாரதிதாசன் பதிப்பகம் (1955)
நல்ல தீர்ப்பு (நாடகம்), முல்லைப் பதிப்பகம் (1944)
நீலவண்ணன் புறப்பாடு
பாண்டியன் பரிசு (காப்பியம்)
பாண்டியன் பரிசு, முல்லைப் பதிப்பகம் (1943)
பாரதிதாசன் ஆத்திசூடி (1946)
பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி (1963)
பாரதிதாசன் கதைகள், முரசொலிப் பதிப்பகம் (1957)
பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)
பாரதிதாசன் கவிதைகள், கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)
பாரதிதாசன் நாடகங்கள், பாரி நிலையம் (1959)
பாரதிதாசன் பதிப்பகம் (1952)
பாரதிதாசன் பன்மணித் திரள், முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)
பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)
புகழ் மலர்கள் நாள் மலர்கள்
புரட்சிக் கவி, துரைராசு வெளியீடு (1937)
பெண்கள் விடுதலை
பொங்கல் வாழ்த்துக் குவியல், பாரதிதாசன் பதிப்பகம் (1954)
மணிமேகலை வெண்பா, அன்பு நூலகம் (1962)
மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
முல்லைக் காடு, காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)
விடுதலை வேட்கை
வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
வேங்கையே எழுக
இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.